Monday, June 15, 2009

கைப்பேசி பாதுகாப்பு மென்பொருள்





நண்பர்களுக்கு வணக்கம்.பதிவு எழுதி பல மாதங்கள் ஆகின்றன.இருந்தாலும் .ஒருசில உபயோகமான மென்பொருள்கள் கண்னில் படும்போது அதுவும் இலவசமாக கிடைக்கும்போது பெரிதும் ஆனந்தம்தான்.நம் கைப்பேசியை பாதுகாக்கும் மென்பொருள் ஆனால் அனைத்துவகை கைப்பேசிகளுக்கு பொருந்தாது.சில வகை nokia s60 platform java கைப்பேசிகளுக்குமட்டுமே பொருந்தும்.இந்த மென்பொருள் சிலபேருக்கு முன்பே தெரிந்து இருக்கலாம்.ஏற்கனவே ஒற்றன் என்கிற மென்பொருளை அறிமுகப்படித்தியிருந்தேன்.அதுபோல இதுவும் ஒரு அருமையான மென்பொருள்.
http://www.ziddu.com/download/5197352/fornokiajavaphones.rar.html

Tuesday, February 17, 2009

உங்கள் கனினியை உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும் பார்க்கலாம்.



உங்கள் கனினியை உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும் பார்க்கலாம்.
இது பலபேருக்கு தெரிந்தகதைதான் இருந்தாலும் என்னைப்போல சிலபேருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.


அதன் பெயரோ டீம் வீய்வர் அந்த மென்பொருளை இறக்கி ரன் செய்தவுடன் அது ஒரு பாஸ்வேர்ட் மற்றும் யூசர்நேம் தருகிறது.



அந்த பாஸ்வேர்டையும் யூசர்நேமயும் உங்களாது நண்பருக்கு கொடுக்கவேண்டும்.அவ்வளவுதான் உங்களது நண்பர் உங்களது கனினியில் புகுந்து ஆராய்ந்து கொண்டிருப்பார்.


இருந்தாலும் உங்களது அனுமதியில்லாமல் எந்த ஒரு கோப்புகளையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிடமுடியாது.


ஆனால் எப்போது உங்கள் பாச்வேர்ட் மற்றும் யூசர்நேமை கொடுத்துவிடுகிறீர்களோ அடுத்த நிமிடம் உங்களது டெக்ஸ்டாப் உங்கள் கனினிதிரை நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அனைத்தயும் உங்கள் நண்பரால் கானமுடியும்.


நீங்கள் உங்கள் நண்பரின் கனினியை பார்க்கவேன்டுமானால் உங்க‌ள் ந‌ண்ப‌ரும் அந்த‌ மென்பொருளை நிறுவியிருக்க‌வேண்டும் அவ‌ரிட‌ம் கேட்டு பெற்று கொள்ளுங்க‌ள் அவ‌ருடைய‌ பாஸ்வேர்ட் ம‌ற்றும் யூச‌ர்நேமை.


இது ஒரு பிர‌ச்ச‌னைக்குறிய‌ விச‌ய‌ம் என்றாலும் சில‌வ‌கையில் ந‌ன்மைத‌ர‌கூடியதாக‌வும் இருக்கிறது இந்த‌ டீம்வீய்வ‌ர்.


சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு உங்க‌ள் ஆலோச‌னைக‌ளை பார்த்துகொண்டே சொல்ல‌லாம்.ம்ம் முய‌ற்சி ப‌ண்ணிபாருங்க‌ உங்க‌ள் நெருங்கிய‌ ந‌ன்ப‌ர்க‌ளிட‌ம். thanks mr selvamani

teamviewer dirrect download clik here and run




Monday, January 5, 2009

அன்புள்ள பில்கேட்ஸ்க்கு ஒரு வின்னப்பம்








ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம்.


அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம்.



ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது.


நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார்.


எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை.

அதையும் சேர்த்துவிடுங்கள்.


3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.


4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.


5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find"மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.


6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.


7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?


8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.


9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?


10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?


11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?


உங்கள் அன்பு,--~--~---------~--~----~------------~-------~--~----~-~----------~----~----~----~------~----~------~--~-----


நன்றி பகிர்ந்த நண்பர் இளையராஜாவிற்கு


Happy Holidays from Yahoo! Messenger Spread holiday cheers to your friends and loved ones today!

Saturday, January 3, 2009

காதலித்து கொண்டிருப்பவர்களும் கடலைபோடுபவர்களும் கொஞ்சம் பாருங்க‌

கடலை என்பது எந்த வித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்கு தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும்.



இக்கடலையாகப்பட்டது ஒரு ஆனும் ஒரு பெண்னும் இனைந்து செய்வது.இதை ஒரு ஆணும் ஆணூமோ பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது.அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர் வைத்துருக்கிறது.





இன்னொரு நண்பர் ஒருவர் மாதத்திற்கு $100 டாலர் தனது மொபைலுக்கு பனம் கட்டுகிறார்.எல்லாம் கடலை செயல்.



இவ்விசயத்தில் பெண்கள் மிக கெட்டிகாரத்தனமாய் மாதந்தோறும் 20000 எஸ்எம்எஸ்கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.



அது தவிர மினிமம் பேலன்ஸ் மெயின்டயின் செய்து மிஸ்டுகால் மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்.இதனால் அவர்களுக்கு பொருளிழப்பு அதிகமில்லை.இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிந்து விடுகிறது.


நேரிலோ அது கிடையாது,அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும்.அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும்.இல்லையென்றால் விடுங்கல் வேறுயாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.

இருந்தாலும் நமது சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்துகொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுகாக,
கடலை போட சில வழிகள்,



1. நேரில் பேசும் போது கண்ணைபார்த்து பேசவும்.அதிகம் வழியாதீர்கள்.அல்லது கையில் கைக்குட்டை வைத்துகொள்ளவும்.


2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு பி.எஸ்.வீரப்பா போல் சிரிக்கவும் சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.




3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும்(ஹீரோயிசத்திற்கு உதவும்).ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும்.


4.வாய் கூசாம‌ல் கேட்ப‌வ‌ரை குறித்து புக‌ழ்ந்து பொய் பேச‌வும்.ஓவ‌ர் புக‌ழ்ச்சி உட‌ம்புகு ஆகாது அளந்து புக‌ழுங்கள்(உத‌விக்கு நிறைய‌ காத‌ல் புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்து அறிவை வ‌ள‌ர்க்க‌லாம்.ஆங்கில‌புத்த‌க‌ங்க‌ள் என்றால் சிறப்பு)


5.பேசும்போது குரங்குசேட்டைகளை தவிர்க்கவும்(காது குடைவது,மூக்கு நோண்டுவது போன்றவை)

6.அடிக்க‌டி உங்க‌ளை ப‌ற்றி பீத்திகொள்ளாதீர்க‌ள்,அதை பூட‌க‌மாக‌ செய்ய‌வும் (அதாவ‌து சுற்றிவ‌ளைத்து)

7.நீங்க‌ள் இத‌ற்குமுன் செய்த‌ லூசுத்த‌ன‌மான‌ சேட்டைக‌ளை குறித்தும் அதன் பின்விளைவுக‌ள் குறித்தும் எக்கார‌ன‌ம் கொண்டும் பேச‌க்கூடாது (உதா‍,லைச‌ன்ஸ் இன்றி போலிசிட‌ம் மாட்டிகொண்டு 13 ரூபாய் கொடுத்து த‌ப்பித்த‌ வீர‌சாக‌ச‌ங்க‌ளை பேச‌வேகூடாது.)


8.எந்த கட்டத்திலும் 'அப்புறம்' என்று கேட்டு விடாதீர்கள் அது கடலையை உடனே நிறுத்திவிடும்.

நன்றி கடலைக்கு வித்திட்ட நண்பர் இளையராஜாவிற்கு

Wednesday, December 24, 2008

தமிழச்சியிடம் ஒருமணி நேர உரையாடல்.




நானும் பதிவு போட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. என்னவோ எழுதவும்தோன்றவில்லை.நேரமின்மை ஒரு காரணம்.நேற்று புதன்கிழமை நான் யாஹோ மெசஞ்சரில் அரட்டையடித்து கொண்டிருந்தபோது தமிழச்சியை ஆன்லைன்லில் பார்த்தேன் அப்போது சற்று பிசியாகவே இருந்தார்.

நான் முதலில் ஹாய் என்று அரட்டையை தொடங்கியபோது வெய்ட் என்ற தமிழச்சியின் பதில்.நானோ சாப்பிடவேன்டும் அப்போது இரவு 10_த்து மணி நான் தமிழச்சியிடம் நான் சென்று தோசை ஊற்றி சாப்பிட்டுவிட்டு 10_த்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு (ஏனென்றால் தமிழச்சி பிசியாக இருந்தார்) நானோ தோசை ஊற்றி சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அரட்டைக்கு வந்தேன்.

என்ன ஒரு ஆச்சர்யம் தமிழச்சியின் அழைப்பு நான் நினைத்து கூட பார்க்கவில்லை அவர் அழைப்பார் என்று.

(ஒகே உரையாடலுக்கு செல்வோம்)

என்னை சில‌பேருக்கு தெரியும் நான் ஒரு ப‌திவில் கூட த‌மிழ‌ச்சியின் ஒரு ப‌திவில் அதிருப்தி அடைந்து அவ‌ரை தாக்கியும் எழுதியிருக்கிறேன்.ம்ம்ம்.. அது அப்போதுள்ள‌ கோப‌த்தாலோ என்ன‌வோ அப்ப‌டி எழுதும் சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டேன்.இருந்தாலும் நேற்றைய‌ உரையாட‌லுக்கு பிறகு அவ‌ருடைய என்ன‌ம்,ம‌னநிலை,அவருடைய எழுத்தின் நோக்கம் அனைத்தும் அருமையாக விவ‌ரித்தார்.

என்ன‌வோ ஒரு சில வார்த்தைக‌ளில் ந‌ம‌து சென்னை த‌மிழ் விளையாடிய‌து.எப்ப‌டி இந்த‌ த‌மிழ் என்று த‌மிழ‌ச்சியிட‌ம் வின‌விய‌போது சிரிப்பு ம‌ட்டுமே ப‌திலாக‌ இருந்த‌து.சில‌ வெளிநாட்டு வாழ் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளை இந்திய‌ர்க‌ள் என்று சொல்லிகொள்வ‌த‌ற்கு வெட்க்க‌ப்படும் இந்த‌ சூழ்நிலையில் அவ‌ரோ இனைய உலகில் த‌மிழ‌ச்சி என்று தன்னை அடையாளாப்படுத்திகொன்டது அதிர‌வைக்கிறது.

அவ‌ரை புக‌ழ்ந்து பேச‌வில்லை புக‌ழ்ந்து சொல்ல‌ இந்த ப‌திவு போட‌வில்லை.புக‌ழ்ந்து சொல்வ‌து த‌மிழ‌ச்சிக்கு அற‌வே பிடிக்காது.பிரான்சில் இருந்துகொண்டு த‌மிழ்நாட்டின் நிலையை அக்குவேறு ஆணிவேறாக‌ தெரிந்து வைத்துருக்கிறார்.

தமிழச்சியின் எழுத்துபனி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!



தூற்றுவார் தூற்ற‌ட்டும் போற்றுவார் போற்ற‌ட்டும்.

Tuesday, November 18, 2008

புலிகள் கடித்து குதறியது.






புலிகள் இடத்துக்குப் போய், அவற்றின் கோபத்தைக் கிளறிவிட்ட ஆடவரை அந்தப் புலிகள் கடித்துக் குதறிவிட்டன.சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் குத்தகை ஊழியராகப் பணி புரிந்த நோர்டின் பின் மொன்டொங் (32), நேற்று முன்தினம் பிற்பகல் 12.30 மணி அளவில் இரண்டு வங்காளப் புலிகளால் தாக்கப்பட்டு இறந்தார்.


“இந்தத் தாக்குதலைப் புலிகள் தாமாகச் செய்யவில்லை. புலிகள் கூடத்தில் உள்ள அகழியில் நோர்டின் குதித்தபோது அந்த ஒலியைக் கேட்ட புலிகள் ஆர்வம் காரணமாக அகழிக்குப் பக்கத்தில் ஓடி வந்தன.“துடைப்பக் கட்டையாலும் வாளியாலும் தொந்தரவு செய்தபோதும், புலிகள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தன.


“நோர்டின் உரக்கக் குரலில் கத்திய பின்னரே தாக்குதல் தொடங்கியது,” என்று சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் உதவி இயக்குநரான திரு பிஸ்வாஜிட் குஹா, நேற்றுச் செய்தியாளர் களிடம் விளக்கினார்.


“நோர்டின் எழுப்பிய உரத்தக் குரலால் பயந்து போன புலிகள், தற்காப்புக்காகவே தாக்கின.


“அப்பொழுது விலங்குப் பராமரிப்பாளர் ஒருவர் அபாய ஒலியை எழுப்பினார்.


“ஏறத்தாழ 30 விலங்குப் பராமரிப்பாளர்கள் ஓடி வந்து பொருட்களை வீசி எறிந்தும் சத்தம் எழுப்பியும் புலிகளின் கவனத்தைத் திருப்ப முற்பட்டனர்.


“அப்பொழுது சில விலங்குப் பராமரிப்பாளர்கள் புலிகளின் கூடத்தைத் திறந்தனர். சுற்றி உள்ள அனைவரும் கூச்சல் எழுப்பி பொருட்களை விட்டெறிந்ததால் பயந்து போய் புலிகள் கூடத்திற்குள் நுழைந்தன.


“உடனடியாக நான்கு விலங்கியல் மருத்துவர்கள் நோர்டினுக்கு முதலுதவி செய்ய முற்பட் டனர்.


அப்பொழுதுகூட அவர் உயிருடன்தான் இருந்தார். ஆனால், புலிகளின் தாக்குதல்களால் நோர்டினுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர் விளக்கினார்.


என்றாலும் பின்னர் அவர் மாண்டார்.நோர்டின¬ன் தலையிலும் கழுத்திலும் தோள் பட்டைகளிலும் புலிகள் பலமாகக் கடித்திருந்தன. அவரது கைகளிலும் புலிகள் கீறியிருந்தன என்று தமிழ் முரசு அறிகிறது.வேலி போன்ற பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் இயற்கை அழகு குறைந்துவிடும் என்பதால் புலிகள் கூடத்தின் தோற்றம் மாற்றப் படாது என்றும் திரு பிஸ்வாஜிட் சொன்னார்.“



புலிகள் மீது எவ்வித தவறும் இல்லை. அடுத்த ஒரு வாரத்துக்கு அவற்றின் நடவடிக்கை கள் தீவிரமாகக் கவன¬க்கப்படும். சுமார் ஒரு வாரத்தில் இந்த புலிகள் கூடம் மீண்டும் திறக்கப்படும்,” என்றார் அவர்.

Sunday, October 12, 2008

மீண்டும் சில மின்னஞ்சல் புகைப்படங்கள்