
Free Graphics - MySpace/Xanga/Friendster
இதை இரு நண்பர்கள்(பிரசாத்,கிரி) மூலம் அறிந்த கதை,இந்த கதையை படிக்கும் போது உங்களில் சிலர் இப்படி இருந்தால் தயவுசெய்து மாற்றிகொள்ளுங்கள்.இதை ஒரு கருத்தாக மட்டுமே சொல்லிகொள்ள விரும்புகிறேன்.ஒரு விவசாயி தனது மகனிடம் பக்கத்துவீட்டாரிடம் மன்வெட்டி வாங்கிவர சொன்னான்,அவன் பையனும் சென்று பக்கத்து வீட்டாரிடம் கேட்டான்,அவர்கள் இல்லை என்று சொல்லிஅனுப்பி விட்டனர்,மீண்டும் அடுத்த வீட்டாரிடம் கேட்க சொன்னான்,அவர் மன்வெட்டி ஒடிந்து விட்டது என்று சொல்லிவிட்டனர்,விவசாயிம் விடுவாதாக தெரியவில்லை,அடுத்த வீட்டிற்கு சென்றுகேள் என்று பிள்ளையிடம் சொல்ல பிள்ளையும் சென்று கேட்க அந்த வீட்டுகாரர்கள் வைத்துகொண்டே இல்லை என்று சொல்லிவிட்டனர்.அதற்கு விவசாயி தன் மகனிடம் சீ என்னடா வைத்துகொண்டே இல்லை என்று சொல்லுகிறார்கள்,நமது வீட்டுபரனை மேல் உள்ள மன்வெட்டியை எடுத்துகொண்டுவா வயலக்கு செல்வோம் என்றானாம்.இதை படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது,ஆனால் சிந்திக்கவும் வேண்டும்,தன் பொருளென்றால் ஒரு மாதிரி அடுத்தவர் பொருளென்றால் ஒரு மாதிரி,இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.நம்ம எப்படி? கொஞ்ஞம் சொல்லுங்கள் கேட்ப்போம்.
3 comments:
இந்த கதை எப்படி இருக்கிறது என்றால்
" நான் உங்க வீட்டுக்கு வந்தால் என்ன தர்வீங்க,நீங்க எங்க வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டுவருவீங்க" எனும் மனபோக்கு உள்ள மனிதர்களை படம் பிடிப்பது போல் உள்ளது.இந்த மனிதர்களை காலம் மாற்றும்.முடியாவிட்டல் முடித்துவிடும்(கோபத்துடன் நிலை கெட்ட மனிதர்களை.)
தொடர்ந்து தரும் ஆதரவிற்கு நன்றி நெல்லை.
Nandraga ullathu. Indriya manithargalin mananilaiyai padam pidipathaga ullathu. Enaku thangal tharum adaravuku nandri
Post a Comment