Sunday, June 1, 2008

படப்பிடிப்புக்கு வராததால் நடிகர் பிரகாஸ்ராஜிக்கு நடிக்க தடை.



வில்லன் கதாபாத்திரம் என்று இல்லை எந்த கதாபத்திரமாக இருந்தாலும் சும்மா அதிரவைக்கும் திறமையுள்ளவர்.சமீபகாலமாக படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட தேதியில் வருவதில்லை என புகார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில் வந்தவன்னம் உள்ளன.இப்போது தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.தமிழ்,தெலுங்கு,கன்னட படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் இதனால் பலபடங்களுக்கு கொடுத்த தேதியில் சரியாக படப்பிடிப்புக்கு செல்வதில்லை.தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடைவிதிக்கபட்டுள்ளது.தெலுங்கு தயாரிப்பு கவுன்சில் நேற்று ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டது அதில் பிரகாஸ்ராஜ் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் இதனால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது என்றும் புகார் கூரப்பட்டது.இதையடுத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை அனுகவேண்டாம் என்று கூரப்பட்டுள்ளது.ஜல்சா,கந்திரி,பருகு அகிய தெலுங்கு படங்கள் இப்பிரச்சனையால் முடிக்கபடவில்லை.



இவருக்கு சொல்லவேண்டியதில்லை ஏனென்றால் இவர் நடிகர்மட்டுமல்ல தயாரிப்பளர்,இயக்குனர் அனைவரின் பிரச்சனையும் இவருக்கு தெரியும்.

கொசுறு செய்தி
முன்பே தடை விதிக்கபட்டது இவர் பாதியில் நடித்துகொண்டிருந்த படங்கள் பாதிக்கபடும் என்பதால் சிலமாதங்களில் அந்ததடை நீக்கப்பட்டது.மறுபடியும் வந்தது தடை.

1 comment:

மாதங்கி said...

வாழ்த்துகளுக்கு நன்றி தென்றல் சங்கர்