Sunday, May 25, 2008

தமிழச்சி என்ன பெரியாரின் பேத்தியா?


என்ன கொடும கிரி இது நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு புரட்சி பெண்னை பார்த்ததில்லை.இவர் தமிழ் பெண்னா என்று எனக்கு சந்தேகம் வருகிறது.எந்த ஒரு தமிழ் பெண்னும் இப்படி எழுதி நான் பார்க்கவில்லை இனி பார்க்க போவது இல்லை.கருத்து சுதந்திரம் என்னும் பேரில் பெண்களுக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார்.வலிக்கிறது எதற்காக என்ன ஒரு கர்வம் கேட்டால் நான் புரட்சி பெண்.என்ன புரட்சிபெண் ஏன் சொல்கிறேனென்றால்,

சமீபத்தில் ஒரு பதிவு(http://thamizachikirukkalkal.blogspot.com/)அவருடைய தமிழச்சியின் கிருக்கல்கள் வலைப்பூவில் ஆண்களை கேலி செய்து ஒரு பதிவு,அதன்
தலைப்பை கூட நான் போட விரும்பவில்லை பகுத்தறிவு என்று சொல்லிகொண்டு ஏதேதோ பினாத்திகொண்டு வருகிறார் வேறொருவலைப்பூவில்.நன்பர் கிரியின் கருத்து எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அவருக்கு மிகவும் கோவம்தான் ஆனால் அவர் காட்டி கொள்ளவில்லை.எதற்கு எழுத உங்களுக்கு உரிமை இருக்கும் போது மறுக்க எனக்கும் உரிமை இருக்கிறது.ஆனால் மறுப்பதை நான் வாடிக்கையாக்கி கொள்ள விரும்பவில்லை.இதில் தமிழச்சி சொல்லியிருந்தார்.

//உண்மைதான். நான் சொல்ல வந்த விடயங்கள் பல நேரங்களில் கும்மி அடிப்பவர்களால் ஆபாசமாக இருப்பது போல் திசை திருப்பப்பட்டிருக்கிறது.//

இதில் இளையகவி என்கின்ற ஜால்ரா வேறு.இதில் கும்மிஅடிப்பவராக தமிழச்சி கூறியிருப்பது இளயகவியத்தான் என நான் கருதுகிறேன்.கும்மி அடிப்பவரால் மட்டுமே அந்த பதிவை பாராட்டமுடியும்.இன்னும் சொல்ல போனால் சிலபெண்களுக்கு கூட நீங்கள் எழுதுவது எரிச்சல் மூட்டக்கூடும்.சரி புரட்சிபெண்னே! எத்தனை பென்கள் இந்த பதிவிற்கு பாராட்டு தெரிவித்துருக்கிறார்கள்.

இதோ கிரி சொன்னது

கிரி said... தமிழச்சி நீங்கள் சிறப்பாக கவிதை எழுதுகிறீர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் எழுதும் உங்கள் தைரியத்துக்கு என் பாராட்டுக்கள். என்னால் உங்கள் கருத்தோடு ஒத்து போக முடியவில்லை என்றாலும் ஒருத்தர் தனித்து தெரியும் போது பாராட்டுவதில் என்றும் நான் ஈகோ பார்ப்பதில்லை.

நீங்கள் பெண்கள் பற்றி தைரியமான கருத்துக்களை முன் வைக்கிறீர்கள் பாராட்டுக்கள், அதையே ஏன் ஆபாசமான கவிதைகளாகவும் (நீங்கள் ஆபாசமாக அதை கருதவில்லை) முரட்டு தனமான எழுத்துக்களாகவும் எழுதுகிறீர்கள். சாதரணமாக எழுதினால் யாரும் அதை சீண்டுவதில்லை என்பதாலா! ஏனென்றால் நம் மக்களிடையே (என்னையும் சேர்த்து) நல்ல விசயங்களை கூறினால் அதை கவனிப்பதற்கு ஆள் இருக்க மாட்டார்கள். வித்யாசமாக எதாவது முறையில் சொன்னால் மட்டுமே அதை கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். உங்கள் பதிவை பலரும் படிப்பது

உங்களுக்கு அதிகமாக வருகை இருப்பது அனைத்துமே நீங்கள் பெண் என்பதால் தான் என்பது கருத்து (அதற்காக உங்கள் எழுத்தை நான் குறை கூறவில்லை). இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். பலர் உங்கள் எழுத்துக்கள் விரும்பி வரலாம் ஆனால் பெரும்பான்மையானவர்கள் வருவது நீங்கள் பெண் என்பதால் தான். என்னுடைய கணிப்பு தவறாகவும் இருக்கலாம். பொதுவாக எல்லோரும் நினைப்பது நாம் நினைப்பது சரி என்று, பின்னாளில் வேறு எதாவது அனுபவத்தால் இது இல்லை என்று மாறலாம் அல்லது இதே நிலை உறுதிப்படலாம்.

நான் என்னை யோக்கியன் என்று கூறவில்லை, ஆனால் கண்டிப்பாக மோசமானவன் கிடையாது :-) உங்கள் கருத்தை சொல்லும் முறையில் இந்த நிமிடம் வரை எனக்கு உடன்பாடு இல்லை, இனிமேலும் அது எனக்கு வராது என்றே நம்புகிறேன். உங்கள் கருத்தை மாற்றுங்கள் என்று உங்கள் சுதந்திரத்தில் தலையிட எனக்கு உரிமை இல்லை, அதே போல கூறினால் நீங்களும் மாற்றி கொள்ள போவதில்லை.

ஆனாலும் நான் கூறுகிறேன் :-) யோனி குறி வன்புணர்ச்சி போன்ற நீங்கள் கூறும் பகுத்தறிவு (உங்கள் பார்வையில்) செய்திகள் பலரை கிளர்ச்சியடைய செய்கிறதே தவிர நீங்கள் அதன் மூலம் சொல்ல வந்த உள் கருத்தை புரிந்து கொண்டவர்கள் மிக சிலரே என்பது என் தனிப்பட்ட கருத்து. பாராட்டுபவர்கள் எல்லாம் உண்மையானவர்கள் கிடையாது... பாராட்டாதவர்கள் எல்லாம் உங்கள் கருத்துக்கு எதிரிகள் கிடையாது.

அன்புடன்
கிரி
நன்றி கிரி உங்களுடைய கருத்து முற்றிலும் உண்மை.

23 comments:

Nila's said...

இப்போது தான் இணையத்திற்கு வந்திருந்தாலும் விவரமான ஆளாகத்தான் இருக்கிறீர்கள். தமிழச்சி எழுதிய கவிதையை என்னால் குறை சொல்ல முடியாது. ஒரு ஆண் நாங்க நின்றுக்கொண்டே ஓன்னுக்கு போவோம் என்று சொல்லும் போது ஒரு பெண் ஏன் சொல்லக்கூடாது?

Anonymous said...

//பிறருக்கு உதவி செய்தாலும் செய்.உபத்ரம் செய்வது பிடிக்காது.//

சொன்னது யார் என்று
தெரிகின்றதா?

கிரி said...

அய்யய்யோ பத்த வச்சிட்டீங்களே சங்கர். நான் என் கருத்தை கூறினேன் அவ்வளவே மற்றபடி எனக்கு மனவருத்தம் உண்டு கோபம் இல்லை. நீண்ட நாட்களாக எனக்கு இதை சொல்ல வேண்டும் என்று இருந்தது, அதனால் கூறினேன்.

சங்கர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து, ஒவ்வொரு சிந்தனை. இதில் நாம் சொல்வது தான் சரி, நீ சொல்வது அசிங்கம், தவறு என்று யாரும் வரையறை வைக்க முடியாது. அனைவருக்கும் அவர்கள் கருத்து மீது நியாயம் உண்டு.

எனக்கு தமிழச்சி அவர்களின் தைரியமான பேச்சின் மீது எப்போதும் ஆச்சர்யம் உண்டு, அதை சரியான (எனக்கு அது தவறு என்று படுகிறது, இன்னொருவருக்கு சரி என்று படுகிறது) முறையில் கூறலாமே என்பது தான் என் ஆதங்கம். அவ்வாறு கூறுவது தவறு இல்லை என்பது அவரின் மற்றும் அவர் கருத்தோடு ஒத்தவர்களின் வாதம். எனவே இதில் யார் கூறவது சரி சரியில்லை என்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அதை யாரும் வரையறுக்கவும் முடியாது. எனவே அதற்கான விவாதம் பயனற்றது என்பது என் கருத்து. பிடிக்கவில்லை என்பதற்காக தமிழச்சியை அல்லது வேறு ஒருவரை அசிங்கமாக திட்டுவதோ அனானி யாக போய் தவறாக பின்னூட்டம் இடுவதோ என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம் மற்றும் கருத்து. என்னை பொறுத்தவரை விவாதங்கள் இருக்க வேண்டும், ஆனால் அது ஆரோக்கியமானதாக.

நன்றி சங்கர் என்னை பற்றிய உங்கள் கருத்துக்கு.

அன்புடன் கிரி

இளைய கவி said...

சங்கர் அவர்களே

http://dailycoffe.blogspot.com/2008/05/blog-post_26.html


போய் பார்க்கவும்

என்றும் அன்புடன்
இளையகவி

இளைய கவி said...

this is for email

Anonymous said...

கொள்ளிடம் சங்கர் அவர்களே! உங்களுடைய பதிவை வாசிக்கும் போது தமிழச்சியைப் பற்றி நீங்கள் சொல்லவரும் கருத்துக்கள் முதலில் தெளிவில்லாமல் இருக்கின்றது. ஏற்கனவே தமிழச்சியைப் பற்றி குறை கூறி ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள். எழவு தலைப்பை தான் சொல்கின்றேன். நீங்கள் பிரபலம் ஆக தமிழச்சியை தரக்குறைவாக பேசுவதை முதலில் நிறுத்துங்கள்.

தமிழச்சி எந்த கட்டத்திலும் தன்னை புரட்சிப் பெண் என்று சொல்லிக் கொண்டதில்லை. தமிழச்சியின் கிறுக்கலை மட்டும் குறை சொல்லத் தெரிந்த உங்களுக்கு அவரின் மற்ற தளங்களையும் பார்க்க வேண்டும். அதுசரி பெரியாரின் பேத்திக்கு ஆபாசமாக எழுத அனுமதி உண்டா?

பிறைநதிபுரத்தான் said...

வலைப்பூவில் ‘அரச்ச மாவையே அரைத்து -துவைத்த துணியையே துவைக்கும்' பல பெண் பதிவர்களை போலல்லாமல் - மரபுகளை உடைத்து எழுதும் 'தமிழச்சி'யை படிக்கும் எவருக்கும் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுதான் ஏற்படும்.

'தமிழச்சி' என்ற பெயருக்கே புதிய அடையாளம் தந்தவர் அவர்தான். அவரின் எழுத்துக்களை படித்து 'ஆண் என்ற ஆணவம் - அகங்காரம்' இழந்தவர்கள் பலர்..

அவரின் எழுத்துக்கள்-வார்த்தை பிரயோகம் -காமக்கிறுக்கர்களுக்கு வேண்டுமானால் கிளர்ச்சியூட்டலாம் - ஆனால் பல தமிழர்கள் பெண்களை சமமாக கருதும் பகுத்தறிவுள்ளவராக -மாற எழுச்சியூட்டியிருக்கிறது.

Anonymous said...

//இப்படி ஒரு புரட்சி பெண்னை பார்த்ததில்லை.இவர் தமிழ் பெண்னா என்று எனக்கு சந்தேகம் வருகிறது.எந்த ஒரு தமிழ் பெண்னும் இப்படி எழுதி நான் பார்க்கவில்லை இனி பார்க்க போவது இல்லை.//

தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோள் வைத்திருக்கிறீர்கள்?

ஜகம் said...

இவ்வளவு பேர் கருத்துக்களை சொல்கிறோம். எந்த பதிலும் இல்லாமல் மசமசவென்று இருந்தால் என்ன அர்த்தம்?

Anonymous said...

பெரியாரின் பேத்தி மட்டும் ஆபாசமாக எழுதலாமா? என்னய்யா பதிவு இது? தலையும் புரியல .... வாலும் புரியல.... கிரி மாமு கோவப்பட்டதா சொல்றீக... அவர் என்னடாவென்றால் ஜகா வாங்குகிறார்! நீர் என்னடாவென்றால் முழித்துக் கொண்டிருக்கிறீர்?

Anonymous said...

யோவ்! கொண்ட உருப்படியா ஆணிய புடுங்கனமா வுட்டுக்கு போனமான்னு இரு! எங்க ஜொல்லு சங்க தலைவரையும் தன்மானத் தலைவி தமிழச்சியையும் ஏதாவது பேசின மூஞ்சில ப்ளேடு போட்டு ஆசிட் போட்டுடுவேன்!

தென்றல்sankar said...

sorry still busy please wait and see!

bala said...

தென்றல் சங்கர் அய்யா,
நீங்க எந்த தமிழச்சியைப் பத்தி சொல்றீங்க?நம்ம பாரிஸ் யோனியம்மாவையா அல்லது கவிதாயினி கனிமொழியின் எடுபிடியான கவிதாயினியையா?

பாலா

தென்றல்sankar said...

இதோ வந்திட்டேன்!
நிலா அவர்களுக்கு!
//தமிழச்சி எழுதிய கவிதையை என்னால் குறை சொல்ல முடியாது. ஒரு ஆண் நாங்க நின்றுக்கொண்டே ஓன்னுக்கு போவோம் என்று சொல்லும் போது ஒரு பெண் ஏன் சொல்லக்கூடாது?//
எப்படி வேண்டுமானாலும் ஒன்னுக்கு போகட்டும் இதை எந்த ஒரு ஆணும் தடுக்க மாட்டான்.முழு சுதந்திரம் தருகிறோம்.எதற்கு இப்போது இந்த கேள்வி.

தென்றல்sankar said...

//பிறருக்கு உதவி செய்தாலும் செய்.உபத்ரம் செய்வது பிடிக்காது//

சொன்னது யார் என்று
தெரிகின்றதா?
அனானி இதில் ஏதும் உபத்ரம் இருப்பதாக தெரியவில்லை.தேனும் உபத்ரம் இருந்தால் சுட்டி காட்டவும்.

தென்றல்sankar said...

நன்பர் கிரி அவர்களுக்கு இதில் பத்த வைப்பதற்கு ஏதும் இல்லை.நீங்கள் உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் நான் என் கருத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.ஆனால் ஒன்று உங்கள் பின்னோட்டத்தை உங்கள் அனுமதியில்லாமல் என்பதிவில் பதிவேற்றிவிட்டேன்.அதற்கு வருந்துகிறேன்.உங்கள் கருத்தை பதிவேற்றியது உங்கள் கருத்து எனக்கு பிடித்துபோனது ஒரு காரணமாயிருக்கலாம்.



//பிடிக்கவில்லை என்பதற்காக தமிழச்சியை அல்லது வேறு ஒருவரை அசிங்கமாக திட்டுவதோ அனானி யாக போய் தவறாக பின்னூட்டம் இடுவதோ என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.//
இது கோழைத்தனம் இப்படி ஒரு வேலையை செய்பவர்கள் வலைப்பக்கம் வரவேண்டாம்.
தனது கருத்தை சொல்ல கூட பயப்படுபவர்கள் எதற்கு இங்கு வரவேண்டும்.

தென்றல்sankar said...

ஆனானிக்கு!

//நீங்கள் பிரபலம் ஆக தமிழச்சியை தரக்குறைவாக பேசுவதை முதலில் நிறுத்துங்கள்.//
இதன் மூலம் நான் பிரபலமாகிறேனா ?அய்யோ! அய்யோ! நல்ல நகைச்சுவை.நான் எப்போதும் தறக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை.பயன்படுத்தும் சூழ்நிலை வராது என்றே கருதுகிறேன்.ஆனால் ஒன்று தறக்குறைவான வார்த்தைகளை பயன் படுத்துவதில் அனானிகளே பிரபலம்.இது அனவருக்கும் தெரியும்.


//தமிழச்சியின் கிறுக்கலை மட்டும் குறை சொல்லத் தெரிந்த உங்களுக்கு அவரின் மற்ற தளங்களையும் பார்க்க வேண்டும். அதுசரி பெரியாரின் பேத்திக்கு ஆபாசமாக எழுத அனுமதி உண்டா?//
மற்றபதிவுகளை பற்றி நான் குறைசொல்லவில்லை.நீங்க கேட்கிறத பார்த்தா தமிழச்சி ஆபாசமாக எழுதறாங்களா?நீங்கள் கேட்பதை வைத்து பார்த்தால் தமிழச்சி ஆபாசமாக எழுதுவது தெளிவாகிறது.நன்றி

தென்றல்sankar said...

திரு பிறைநதிபுரத்தான் அவர்களுக்கு!


//'தமிழச்சி' என்ற பெயருக்கே புதிய அடையாளம் தந்தவர் அவர்தான். அவரின் எழுத்துக்களை படித்து 'ஆண் என்ற ஆணவம் - அகங்காரம்' இழந்தவர்கள் பலர்..//
இன்னும் எந்த காலத்தில் சார் இருக்கீங்க? இப்ப போய ஆண் அகங்காரம் அலங்காரம்னு சொல்லீட்டுருக்கீங்க.நான் பார்த்தவரைக்கும் இப்ப எல்லாம் பெண்களுக்கு கீழதான்.நம்ம அகங்காரம் அலங்காரம் எல்லாம்

தென்றல்sankar said...

அனானிக்கு!

//தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோள் வைத்திருக்கிறீர்கள்?//



நீங்கள் தமிழ்ப்பெண்தான் அதான் மறைமுகமாக கேட்கிறீர்கள்

தென்றல்sankar said...

பாலா அவர்களுக்கு!
அட எல்லாம் அந்த பாரிஸ் தமிழச்சி பத்திதான்
பாலா

தென்றல்sankar said...

//யோவ்! கொண்ட உருப்படியா ஆணிய புடுங்கனமா வுட்டுக்கு போனமான்னு இரு! எங்க ஜொல்லு சங்க தலைவரையும் தன்மானத் தலைவி தமிழச்சியையும் ஏதாவது பேசின மூஞ்சில ப்ளேடு போட்டு ஆசிட் போட்டுடுவேன்! //


தோடா, இன்னா இதுமாதிரி நிறையா பார்த்துக்குறோம் கன்னா.நீ மொதல்ல உன் பேரு இன்னா அத்தசொல்லு

Anonymous said...

தாராளமாக சொல்லலாம். ஆனால் ஆண் அனாட்டமி வேறு. பெண் அனாடமி வேறு. அவ்வாறு செய்யும் போது ஆண்களின் கால்கள் நனையாது.

Anonymous said...

'ஒரு ஆண் நாங்க நின்றுக்கொண்டே ஓன்னுக்கு போவோம் என்று சொல்லும் போது ஒரு பெண் ஏன் சொல்லக்கூடாது?'
nila,
தாராளமாக சொல்லலாம். ஆனால் ஆண் அனாட்டமி வேறு. பெண் அனாடமி வேறு. அவ்வாறு செய்யும் போது ஆண்களின் கால்கள் நனையாது.